tamilnadu

img

நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிட தயார்: இராமநாதபுரம் காவலர் அறிவிப்பு

சென்னை,டிச.7- நிர்பயா வழக்கு குற்றவாளிகளைத் தூக்கிலிடும் பணிக்குத் தயார் என்று திகார் சிறை அதிகாரிகளுக்கு, ராமநாத புரம் தலைமைக் காவலர் விண்ணப் பித்துள்ளார். நிர்பயா என்ற மருத்துவ மாணவி கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில்  6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாகப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். நாடு  முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ராம்சிங், மகேஷ்சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்தர் தாக்கூர் ஆகியோரையும், 16 வயது சிறுவன் ஒருவனையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

சிறுவனுக்குச் சிறார் நீதி சட்டப்படி அதிகபட்சமாக 3 ஆண்டு சிறைத் தண்டனை  விதிக்கப்பட்டது. மற்றொரு குற்றவாளி யான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை  செய்து கொண்டான். மற்ற 4 பேருக்கும் விசாரணை நீதிமன்றம் தூக்குத் தண்டனை  விதித்தது. இதைத் தில்லி உயர்நீதிமன்ற மும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. இந்த நிலையில் தூக்குத் தண்ட னையை நிறைவேற்றத் தில்லி திகார் சிறையில் ஆள் இல்லை என்ற தகவல் வெளியானது. இந்த பணிக்கு நான் தயார்  என ராமநாதபுரம் தலைமைக் காவலர்  தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக திகார் சிறையின் தலைமை இயக்குநருக்குக் கடிதமும் அனுப்பி உள்ளார். அவரது பெயர் சுபாஷ்  சீனிவாசன் (42). ராமநாதபுரம் மாவட்ட காவல் பணியிடை பயிற்சி மையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுகிறார்.

அவர் திகார் சிறை அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:- நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற 4  பேரைத் தூக்கிலிட திகார் சிறையில் ஆள்  இல்லை என்பதால், தண்டனை தள்ளிப் போவதாகச் செய்திகள் வருகின்றன. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு விரை வில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நான் அந்தப்  பணியைச் செய்ய விருப்பம் தெரிவிக்கி றேன்.

மேற்கண்டவாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமைக் காவலர் சீனிவாசன் தேவிபட்டினத்தில் பணியாற்றிய போது, அனாதை பிணங்களை அடக்கம் செய்வது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது போன்ற சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா விடம் அண்ணா பதக்கம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் விருதுகளைப் பெற்றுள்ளார்.